GuidePedia

1
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை


இன்றைய கால கட்டத்தில் , பணத்தின் தேவை நாளுக்கு, நாள் அதிகமாகி கொண்டேயிருக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. நாளுக்கு, நாள் மருந்து பொருட்களின் விலையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடு,கிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, நாம் கடன்பத்திரங்களில், பரஸ்பர நிதிகளில் மற்றும் பல நிதி திட்டங்களில் முதலீட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றாது. அதில் பணத்திற்கு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இருந்தாலும், நம் முதலீட்டின் மூலம் கிட்டும் வருவாய் மிக குறைவு.

இதையே பங்குகளில் முதலீட்டினால் வருவாய் அதிகம் கிட்டும். ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், ஒரு நீண்டகால நோக்கில் பங்குகளில் முதலீட்டினால், ஆபத்தின் அளவு அறவே இல்லை என்றும் கூறலாம். மேலும் அது தரும் லாப பங்குதொகை மற்றும் வெகுமதி பங்குகளால், நம் முதலீட்டின் வருவாய் அதிகரித்து கொண்டே இருக்கும்.

நாம் செய்கிற வேலை அதன் பாட்டுக்கு ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும், நாம் பங்குகளில் முதலீட்ட மறந்து விடக் கூடாது. ஏனென்றால்1980- 90 களில் Infosys நிறுவன துவக்க வெளியீட்டின் போது ரூ.10. இன்றோ சில ஆயிரங்களுக்கும் மேல். இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நாம் இன்று செய்யும் முதலீட்டின் அருமையை, சில ஆண்டுகளின் பின்னால் அதன் பலனை உணரலாம். மேலும் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் , அந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிறோம். பங்குகளை பல ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பதனால், நமக்கு லாப பங்குதொகை கிடைப்பததோடு அல்லாமல் சில சமயங்களில் நிறுவனம் வெகுமதி பங்குகளையும் கொடுக்கும். இதனால் பங்குகளின் எண்ணிக்கையும் கூடும். அதிக வருவாயும் கிடைக்கும்.

ஆகவே பங்கு வர்த்தகம் பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள். பணக்காரர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை மாறிவிட்டது.

நிறைய பேர் பங்கு வர்த்தகம் செய்வதன் உடனடியாக பணம் பார்த்துவிட நினைக்கிறார்கள். அது சாத்தியப்பட வேண்டுமானால் பங்கு வர்த்தகம் பற்றி நன்றாக அறிந்து கொள்ளல் அவசியம். கற்று , கேட்டறிந்து , செயல்பட்டால் வெற்றி நிச்சயம் .
பங்குகளை வாங்குவது எப்படி ?
பங்குகள், இரண்டு வழிகள் மூலம் வாங்கலாம்.

துவக்க பொது வெளியீட்டின் போது, வைப்பக பங்கேற்போர் வாயிலாக
இங்கு நாம் எப்படி வைப்பக பங்கேற்போர் வாயிலாக பங்குகளை வாங்க முடியும் என்பதை காணலாம்.
பங்கு வைப்பக பங்கேற்போர் DP - DEPOSITORY PARTICIPANTS

இது ஒரு வங்கி போல செயல்படும் அமைப்பு. பங்கு வைப்பகத்தின் பிரதிநிதியாக செயல்படுபவர்கள். வங்கிகளில் கணக்கு இருப்பது போல முதலீட்டாளர்களின் பங்கு, பத்திரங்கள் போன்றவற்றை உருவமற்ற மின்னணு வடிவில் (டி மேட்) கணிப்பொறியில் வைத்திருப்பார்கள். காகிதங்களில் உள்ள பங்கு பத்திரங்களை மின்னணு முறைக்கு மாற்றியும் தருவார்கள். பங்கு வர்த்தக சேவையும் அளிப்பார்கள். பங்கு வைப்பக பங்கேற்போர் ஒரு பாதுகாப்பாளர் மட்டும் அல்ல. ஒருபடி மேலாக அவர்கள் ஒருவரின் பங்குகளை மற்றவருக்கு மாற்றி அளிக்க சட்டபூர்வ அனுமதி பெற்றவர்கள். தினசரி வர்த்தகத்திற்க்காக இவர்களிடம் அதி நவீன தொழிற் நுட்பமுடைய இணைய தள சேவை வசதியும் உண்டு. இவற்றை பயன்படுத்த அவர்களுக்கு வருட கட்டணம் செலுத்தினால், நம்மை வர்த்தகம் செய்ய அனுமதிப்பார்கள்.
பங்கு வைப்பக பங்கேற்போர் சேவைகள்
டிமாட் செய்வது .அதாவது பங்குகள் காகித வடிவில் இல்லாமல் டிஜிடல் வடிவில் வைத்துக்கொள்வது ரிமாட் செய்வது .மீண்டும் காகித வடிவில் கொண்டு வருவது. பங்குகளை மாற்றிவிடுவது. பங்கு முதலீட்டாளர்களின் விருப்ப படி, மற்றவருக்கு பங்குகளை மாற்ற உதவுவார்கள். தினசரி பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டால் அன்றைய கணக்குகளை தீர்ப்பது. பங்குகளின் மேல் கடன் முதலானவற்றுக்கு டிமாட் வடிவ பங்குகளை அடமானம் வைக்க உதவுவது உரிமைப் பங்கு / லாப பங்கு / உபரி பங்குகளை உடனடியாக நம் கணக்கிற்கு தருவிப்பது மோசடி / குளறுபடி ஏற்படாமல் பாதுக்காப்பது இன்னும் பல .
பங்கு வைப்பக பங்கேற்போர் (DP) யினால் கிடைக்கும் நன்மைகள்
வாங்கும் பங்குகள் தவறாமல், உரியவரிடம் போய் சேரும். பங்குகள் இடம் மாறுவது தவிர்க்கப்படும். பங்குகளை அவரவர்க்கு உடனடியாக மாற்றமுடியும் பத்திரப்பதிவு தொகை தவிர்க்கப்படும் ...பணம் மிச்சம் தானே பத்திரம் தொலைந்து போதல்/ காணாமல் போதல்/ கிழிந்து- எரிந்துபோதல் / தவறான உபயோகத்திற்கு உள்ளாதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும் .

பங்கு வைப்பக பங்கேற்போர் (DP) எனப்படும் இவர்கள் NSDL எனும் தேசிய பாதுகாப்பு வைப்பகம் , மற்றும் CSDL எனும் மத்திய வைப்பக சேவை -யகத்திற்க்கும், முதலீடு செய்பவர்க்கும் இடையே பிரதிநிதியாக செயல்படுபவர்கள் .

பங்கு வைப்பகம் விதிக்கும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வைப்பக பங்கேற்போர் நடப்பார்கள். முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய மிக உதவியாக இருப்பார்கள்.

SEBI - Securities and Exchange Board of India எனப்படும் இந்திய பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பு வாரியம் அமைப்புடன் இவர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பார்கள் . செபியுடன் பதிவு செய்து சான்றிதழ் பெற்று பங்கு பரிவர்த்தனை சேவைகளை அளிப்பார்கள். இவற்றிக்கு அடையாள் எண் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வெண்களை அவர்களின் அலுவலக அறைகளில் காணலாம்.
இந்தியாவில் இரண்டு பங்கு வைப்பக அமைப்புகள் உள்ளன
தேசிய பாதுகாப்பு வைப்பகம் - National Securities Depository Ltd - NSDL மத்திய சேவையக வைப்பகம் - Central Services Depository Ltd – CSDL

பங்கு வைப்பக பங்கேற்போரிடம் கணக்கு ஆரம்பிக்க நமக்கு நிரந்தர கணக்கு எண்( PAN Card) நமது பெயரில் இருக்க வேண்டும். இந்த எண்ணையும், நமது வங்கியின் கணக்கு எண்ணையும் இவர்களிடம் அளித்தால், நமக்கு பங்கு வர்த்தகம் செய்ய ஒரு அடையாள எண்ணை நமக்கு வழங்குவார்கள். பின்னர் வைப்பக பங்கேற்போரிடம் , நமது வங்கி காசோலையை கொடுத்து பங்குகளை வாங்கலாம், விற்கலாம்.
இங்கு நிரந்தர கணக்கு எண்ணைப் பற்றி பார்ப்போம்.
நிரந்தர கணக்கு எண் அட்டை- PAN CARD - PERMANENT ACCOUNT NUMBER
இது வருமானவரித்துறையினரால் கொடுக்கப்படுவது வரி கட்ட வேண்டியவர்களுக்கு கொடுக்கப்படும் அடையாள என் . தற்போது இந்த எண் ஏராளமான இடங்களில் கேட்கப்படுகிறது வங்கி கணக்கு துவங்க போன் இணைப்பு வாங்க சம்பளம், தொழில்முறை சேவைகளுக்கான கட்டணம் வாங்க என்று பல விஷயங்களுக்கு தேவை படுகிறது.

இது தேசிய மட்டத்தில் கொடுக்கப்படுவதால் நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் உபயோகப்படுத்தலாம். அடையாள அட்டையாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நிரந்தர கணக்கு எண் அட்டை கிடைக்குமிடங்கள்
வருமான வரித்துறை அலுவலகம் பங்கு வைப்பக சேவை அமைப்பு UTI நிதிசேவை அமைப்பு
நிரந்தர கணக்கு எண் அட்டை பெறுவது எப்படி
நிரந்தர கணக்கு எண்- க்கான படிவத்துடன் கீழ்கண்டவைகளில் சிலவற்றை இணைக்க வேண்டும்
பாஸ்போர்ட் ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பள்ளி சான்றிதழ் கல்லூரி பட்டம் கடன் அட்டை வங்கி கணக்கு புத்தகம் குடும்ப அட்டை தண்ணீர் வரி கட்டிய ரசீது சொத்து வரி ரசீது

இவை அனைத்தில் ஏதேனும் இரண்டு நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சேர்த்து ரூ 65 பணத்துடன் அருகாமையில் உள்ள நிரந்தர கணக்கு எண்- க்கான சேவை மையத்தில் சேர்ப்பித்தால் ஒரு மாதத்திற்குள், உங்களின் புகைப்படம் ஒட்டிய நிரந்தர கணக்கு எண் அட்டை உங்கள் வீடு தேடி வந்து சேரும் .

நிரந்தர கணக்கு எண் அட்டை வாங்கியவர் அனைவரும் வரி கட்ட வேண்டுமென்பதில்லை. ஆனால் வரி கட்டுமளவிற்கு வருமானம் இருப்பவர் கண்டிப்பாக வரி கட்ட வேண்டும்.
டி மேட் ( DEMAT ) கணக்கு துவங்க என்ன செய்ய வேண்டும்
கண்டிப்பாக நிரந்தர கணக்கு எண் அட்டை இருக்க வேண்டும் உள்ளூர் வங்கி கணக்கு எண் இரு புகைப்படம் நாம் பரிந்துரைசெய்யவிருக்கும் நபரின் புகைப்படம் ரேசன் கார்டு நகல் அடித்து புரந்த்தள்ளப்பட்ட வங்கி காசோலை பங்கு வைப்பக பங்கேற்போர் கேட்கும் வங்கி காசோலை

ஒரு வங்கி கணக்கு துவக்குவது போலத்தான் இதுவும் .
எந்த பங்கு வைப்பக பங்கேற்போர் இடம் டிமாட் கணக்கு துவங்க விரும்புகிறீர்களோ அவரிடம் இதற்கான விண்ணப்பம் பெற வேண்டும் . அவற்றை அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய பின்னர், 10 முதல் 15 நாட்களுக்குள் உங்கள் கைகளில் டிமேட் எண் வந்துவிடும். உங்கள் பங்குகளை பற்றிய கணக்குகள் டிஜிடல் வடிவில் வைத்துக்கொள்வார்.
டி மேட் இன் நன்மைகள்
பங்கு வர்த்தக பரிமாற்றத்திற்கு வசதியானதும் , பாதுகாப்பானதும் கூட உடனடி பங்கு வர்த்தக பரிமாற்றத்திற்கு காணாமல் போகாது /திருட்டு போகாது /தொலையாது பத்திர பதிவு கட்டணம் கிடையாது வாரிசுதாரர் நியமனம் உடனடி முகவரி மாற்றம் ஒரே தடவையில் உங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனி பங்குகளில் இருந்து வரும் பங்கின் லாபம் / உபரி பங்குகள் / உரிமைப் பங்குகள் ஆகியன அனைத்தும் தானாகவே உங்கள் கணக்கில் வந்து சேர்த்தல்

டி மேட் கணக்கை இப்பொழுது வங்கிகளிலும் துவக்கலாம். முன்பு இது கிடையாது. SBI, ICICI, HDFC, AXIS இன்னும் பிற வங்கிகளும் இந்த சேவையை அளிக்கின்றன. இதனால் உங்களுக்கு அவர்கள் பல வசதிகள் செய்து தருவார்கள். கணக்கு துவங்க வழக்கம் போல உங்கள் அடையாள அட்டை, முகவரி சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.
இது வரை இந்த கட்டுரையை படித்த அனைவருக்கும் நன்றி!!! உங்கள் அடி மனதில் முதலீடு பற்றிய எண்ணம் தோன்றினாலே அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கொள்வோம். வாழ்த்துக்கள்!!!

Post a Comment Blogger

  1. அருமை இன்னும் சில குழப்பங்கள் உள்ளது உங்களது உதவி கிடைக்குமா எனது தொலைபேசி என் 9789371514

    ReplyDelete

 
Top